Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சாந்தகுணத்துடன் பழகுங்கள்

சாந்தகுணத்துடன் பழகுங்கள்

சாந்தகுணத்துடன் பழகுங்கள்

சாந்தகுணத்துடன் பழகுங்கள்

ADDED : ஏப் 25, 2010 12:53 PM


Google News
Latest Tamil News
* உண்மையைப் பேசுங்கள். உண்மையான அனுபவங்களை பற்றி மட்டுமே பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்தோ, மாற்றியோ கூறுவது நல்லதல்ல.

* வீட்டுக்குழந்தைகளுடன் சேர்ந்து பஜனை செய்யுங்கள். இனிமையான சொற்களைப் பேசுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு கடவுளே நாடி வந்துவிடுவார். அப்போது நீங்கள் குடியிருக்கும் இல்லமே ஆலயமாகி விடும்.

* பிறப்பிலும், இறப்பிலும் அனைவரும் சமமே. ஆண்டவனுக்கு உயர்வு தாழ்வு இல்லை. இடையில் தான் வேறுபாடுகள் முளைக்கின்றன. உலகை ஆளும் அரசனும், உலகத்தையே துறந்த ஆண்டியும் ஆண்டவன் முன் சமமானவர்களே.

* அமைதியானவர்களாக, கோபம் என்பதே இல்லாத சாந்த குணம் கொண்டவர்களாக இருக்கப் பழகுங்கள். மனதை நிலவுபோல குளிர்ச்சியுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

* பொறுமை, புலனடக்கம், அமைதி, நிதானம் போன்ற தெய்வீக குணமுடையவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கும் நன்மை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us